சுவாட் நிறுவன திட்ட விளக்க கூட்டம் 2022
சுவாட் நிறுவன திட்ட விளக்க கூட்டம் சுவாட் நிறுவனத்தினால் சவளக்கடை விதாதா நிலையத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு. எஸ். ரங்கநாதன் தலைமையில் 14.09.2022 அன்று நடைபெற்றது.
மாணவர்கள் மத்தியில் சமாதான சகவாழ்வை கட்டியெழுப்புதல் எனும் செயல்த்திட்டத்தின் கீழ் இக்கூட்டமானது இடம்பெற்றது. இதில் சுவாட் நிறுவன திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் அவர்கள் விளக்கமளித்ததுடன் மேலும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. ராசமணி லதாகரன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.கே.பி.மனோஜ் இந்திரஜித் ஆகியோரும் அரச உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்கள், மதகுருமார் மற்றும் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

















