பொங்கல் விழா - 2023
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வருடத்திற்கான பொங்கல் விழா 2023.01.27 ஆந் திகதி அன்று பிரதேச செயலக வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.
உழவுக்கும் உழவர்க்கும் வந்தனை செய்யும் தமிழ் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன் அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலாளர் திரு.எஸ்.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு.பி.பிரணவரூபன், கணக்காளர் திரு. றிஸ்வி யாசர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரீ.கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு.கே.யோகேஸ்வரன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.மனோஜ் இந்திரஜித், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.பி.நித்தியானந்தன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் மேலும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

























* Click Here to view full gallery of this event.















