வாணி விழா - 2023
நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த வாணி விழா நிகழ்வானது 2023.10.24 ஆந் திகதியன்று பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பூஜை வழிபாடுகள் உட்பட வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இந்நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டன. இவ் அன்பளிப்புக்கள் லண்டனில் வசிக்கும் திரு.எஸ்.கருணாநிதி என்பவரால் காரைதீவை சேர்ந்த திரு.சி.நந்தகுமார் என்பவர் ஊடாக வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு.பே.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.எஸ்.சிவம், ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் ஏனைய வெளிக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
































