2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்
2024 ஆம் ஆண்டின் முதலாம் அலுவலக நாளாகிய 2024.01.01 ஆந் திகதியன்று இந்த ஆண்டின் கடமைச்செயற்பாடுகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தேசிய கீதமும் ஒலிக்கச் செய்யப்பட்டது. மேலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் அரச சேவை சத்தியப்பிரமாணத்தையும் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு.பே.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, கணக்காளர் திரு.க.றிஸ்வி யாஹ்சர், நிருவாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.செ.சிவம், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.மனோஜ் இந்திரஜித், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.பு.நித்தியானந்தன் ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் ஏனைய வெளிக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






















