தேசிய கைகழுவும் வாரம் மற்றும் தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் - 2024
தேசிய கைகழுவும் வாரத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி சுகாதார வைத்திய பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2024.06.24 ஆந் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு. பே. பிரணவரூபன், நிருவாக உத்தியோகத்தர் திரு. ஒ. கெ. கீர்த்தி குசுமிந்த ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் சுகாதார தொற்றாநோய் வைத்திய அதிகாரி திரு. எம். ஐ. எம். எஸ். இர்ஷாத் மற்றும் நாவிதன்வெளி சுகாதார வைத்திய பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டதுடன் மேலும் நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் பங்குபற்றினர்.



























